படம் | ஏஎன்ஐ
இந்தியா

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அடர் பனிமூட்டத்தால் தில்லியில் 370க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதம்...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி உள்பட வட மாநிலங்களின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு நிலவும் சூழலில் பனிமூட்டமும் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தில்லியில் பரவலாக காற்றின் தரக் குறியீடு சராசரியாக 373 என்ற அளவில் பதிவாகி மிக மோசம் என்ற பிரிவில் காற்றின் தரம் நிலவுகிறது. தலைநகரின் சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் மேல் பதிவாகி தீவிரம் என்ற பிரிவில் காற்றின் தரம் நிலவுகிறது.

தில்லி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) பனிமூட்டம் அதிகரித்ததைத்தொடர்ந்து, 110 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் 370க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சராசரியாக விமானங்களின் புறப்பாடு அரைமணி நேரம் வரை தாமதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விமான நிலைய தரவுகளிருந்து தெரிய வந்துள்ளது. தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அடர் பனிமூட்டம் காரணமாக கடந்த சில நாள்களாக விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Delhi airport: 110 flights cancelled over 200 services delayed due to fog.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் பனிப்பொழிவுடன் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

SCROLL FOR NEXT