கோப்புப்படம்.  
இந்தியா

அசாம்: 1.4 கிலோ போலி தங்க பிஸ்கட்டுகளுடன் 3 பேர் கைது

அசாமில் போலி தங்க பிஸ்கட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திச் சேவை

அசாமில் போலி தங்க பிஸ்கட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாமின் கம்ருப் மாவட்டத்தில் தமுல்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனத்தை மடக்கி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாகனத்தில் இருந்து போலி தங்கம் மீட்கப்பட்டதாக ரங்கியா காவல் நிலைய அதிகாரி பிரேமன்கூர் ஹசாரிகா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், வாகனச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகனம் ஒன்றில் இருந்து தலா 10 கிராம் 90 துண்டுகள் மற்றும் 5 கிராம் 100 துண்டுகள் என 1.4 கிலோ போலி தங்க பிஸ்கட்டுகளை மீட்டோம்.

அசாமைச் சேர்ந்தவர் இருவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் மற்றும் மூன்று மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.

Three persons were arrested with over one kg of fake gold biscuits in Assam's Kamrup district on Sunday, a police official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் 52 முடிவுற்ற திட்டங்கள் தொடக்கி வைப்பு!

கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் கேட்கவேண்டாம்! - பிரேமலதா விஜயகாந்த்

அது முடிந்த கதை! ராமதாஸுடன் இணைவு பற்றி அன்புமணி!

Online Fine செல்லாது! ஓட்டுநரை மிரட்டும் காவலர்!

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் பிரேஸ்லெட்!உரிமையாளரிடம் ஒப்படைத்த ஓட்டுநர்!

SCROLL FOR NEXT