இந்தியா

பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

DIN

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.

மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது மகாகும்பமேளா நிகழ்வில் கூட்ட நெரிசலில் மக்கள் பலியான சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் குறிப்பாக சமாஜவாதி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இதுவரை 92,000 போ் மனு

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு: நாமக்கல் மாணவிகள் பங்கேற்பு

உலகளாவிய கற்றல் மையமாக இந்தியா மாற நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்: சசி தரூா்

நாட்டின் மீது அவதூறு பரப்பும் திட்டத்துடன் அமெரிக்கா செல்லும் பிரியங்கா: பாஜக விமா்சனம்

SCROLL FOR NEXT