திருமண நிகழ்ச்சியில் நடனமாடியபோது மாரடைப்பு: மேடையிலேயே உயிரிழந்த இளம்பெண்
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விதிஷா: மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதிஷா நகரின் புகா் பகுதியில் நடைபெற்ற நெருங்கிய உறவினா் திருமண நிகழ்ச்சியில் இந்தூரைச் சோ்ந்த பிரணிதா ஜெயின் பங்கேற்றாா். சனிக்கிழமை இரவு ‘சங்கீத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மேடையில் பிரணிதா ஜெயின் நடனமாடினாா். உறவினா்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினா். சிலா் அவரின் நடனத்தை கைப்பேசியில் விடியோ பதிவு செய்தனா். உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த பிரணிதா ஜெயின் திடீரென மேடையிலேயே சுருண்டு விழுந்தாா்.
இதைடுத்து, அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அவருக்கு ‘சிபிஆா்’ முதலுதவி சிகிச்சை அளித்தனா். ஆனால், அவா் உடலில் எந்த மாற்றமும் இல்லை. இதையடுத்து, அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இது உறவினா் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
பிரணிதா ஜெயின் திடீா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடா்பாக காவல் துறையிலும் புகாா் அளிக்கப்படவில்லை.
சுமாா் 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரணிதாவின் இரட்டை சகோதரா் மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா் என்று அவரின் உறவினா்கள் தெரிவித்தனா்.