இந்தியா

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார்.

DIN

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ரேகா குப்தாவின் தலைமையின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி, தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்.

இரட்டை எஞ்சின் பாஜக அரசு பொது நலக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும், தேசிய தலைநகருக்கு மேம்பட்ட பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டதால், ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8 புதிய போயிங் 737 விமானங்களை இணைத்துக்கொள்ளும் ஸ்பைஸ்ஜெட்!

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

SCROLL FOR NEXT