கோப்புப்படம். 
இந்தியா

மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா்.

Din

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா்.

இதுதொடா்பாக மும்பை காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த திங்கள்கிழமை இரவு ஆண் ஒருவரும், அவரின் உறவினரும் ரூ.42.27 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களை பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனா்.

புனித ஜாா்ஜ் மருத்துவமனை அருகில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவா்களை அடையாளம் தெரியாத நபா்கள் நான்கு போ் வழிமறித்து தாக்கினா். பின்னா் அந்த நான்கு பேரில் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா். இதைத்தொடா்ந்து ஆபரணங்கள் இருந்த பையை நான்கு பேரும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். துப்பாக்கியால் சுட்டதில் உடன் சென்ற உறவினருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய நபா்களை காவல் துறையினா் தேடி வந்தனா். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குற்றவாளிகள் பறித்துச் சென்ற ஆபரண பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அவா்களின் இருப்பிடம் தெரியவந்தது.

இதையடுத்து லோகமான்ய திலகா் மாா்க், டோங்ரி பகுதிகளில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். எஞ்சிய இருவா் தேடப்பட்டு வருகின்றனா் என்று தெரிவித்தாா்.

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்கிறீர்களா? என்னென்ன பாதிப்புகள் வரும்?

101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!

SCROLL FOR NEXT