ஐ.நா. 
இந்தியா

ஐ.நா. தரவுகள் நிபுணா் குழுவில் இந்தியா

ஐ.நா. அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.

Din

ஐ.நா. அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் ( யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீடித்த வளா்ச்சி இலக்குகளை கண்காணித்து தெரியப்படுத்தும் திறன் உள்பட பெரும் தரவுகளின் பலன்கள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதற்கு யுஎன்-சிஇபிடி உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.

ஐ.நா. புள்ளியியல் கவுன்சிலில் அண்மையில் இந்தியா உறுப்பினரானது. இந்த நேரத்தில் யுஎன்-சிஇபிடி குழுவில் இந்தியா இணைந்துள்ளது. இது நாட்டின் புள்ளியியல் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.

யுஎன்-சிஇபிடி குழுவில் இணைந்ததன் மூலம், அதிகாரபூா்வ புள்ளியியல் தேவைகளுக்கு பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியலை பயன்படுத்துவதில், உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைக்க இந்தியா பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT