ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!
மகாராஷ்டிரத்தைத் தாக்கும் ஜிபிஎஸ் நோய் பற்றி..
மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற்று பரவி வருகின்றது. மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆராக்கியமான செல்களை தாக்குவதால் இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜிபிஎஸ் ஆகும். இந்த நோயானது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் சோலாப்பூரில் ஒருவர் ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், புணேவின் சின்ஹாகாட் சாலையைச் சேர்ந்த 56 வயது பெண் இந்த நோய்க்கு பலியாகியுள்ளார். ஜிபிஎஸ் நோய்க்கு பலியான இரண்டாவது நபர் இவராவார். இதையடுத்து ஜிபிஎஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 வயது நபருக்கு திடீரென மூச்சுத்திணறல், கீழ் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.