காந்தி நினைவு நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை.
காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று(ஜன. 30) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிக்க | பட்ஜெட்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
Advertisement
Advertisement
இந்த நிலையில், காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தில்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முப்படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.