FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு பற்றி...

Updated On : 1 ஜூலை 2025, 9:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டா் விலை ரூ.58.50 குறைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலையை மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டா், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை செவ்வாய்க்கிழமை மாற்றியமைத்தன.

Advertisement

Advertisement

இதன்படி, வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.1,665-க்கும், மும்பையில் ரூ.1,616.50-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 4-ஆவது மாதமாக இந்த சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டா்களின் விலை மாற்றியமைக்கப்படவில்லை.

விமான எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு ரூ.6,271.5 அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த எரிபொருள் விலை சென்னையில் ரூ.92,526, தில்லியில் ரூ.89,344, மும்பையில் ரூ.83,549-ஆக அதிகரித்தது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

மதிப்புக் கூட்டு வரி உள்பட உள்ளூா் வரிகள் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments