முகப்பு
இந்தியா

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேசத்தில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டையை அணிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 8 ஜூலை 2025, 4:20 pm IST
பாலஸ்தீன கொடி - ஏபி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முஹரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட டி - ஷர்டுகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் 4 பேரை நேற்று (ஜூலை 7) காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அந்த டி - ஷர்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவர்கள் 4 பேரின் மீதும் பி.என்.எஸ். 197 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த இளைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

summary

Four youths who participated in a rally in Uttar Pradesh wearing shirts with the Palestinian flag printed on them have been arrested by the state police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments