போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!
இந்திய விமானப் படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி...
ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் விமானம் இன்று(புதன்கிழமை) பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உள்பட இருவர் பலியானதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Advertisement
Advertisement
"இந்திய விமானப் படையின் ஜாகுவார் பயிற்சி விமானம் தனது வழக்கமான பயிற்சியின்போது ராஜஸ்தான் சுரு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். பொதுச் சொத்துகள் சேதம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
விமானிகள் இருவரின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் குடும்பத்திற்கு துணையாக இருக்கிறோம்.
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
Two Indian Air Force pilots died after a Jaguar trainer jet crashed in Rajasthan's Churu district on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.