கேரள முதல்வர் பினராயி விஜயன் ENS
இந்தியா

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தம்பனூர் காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாய் மற்றும் வெடிகுண்டுப் படைகளின் உதவியுடன் நாங்கள் முழுமையான சோதனைகளை மேற்கொண்டோம். ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

100-ஆவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்..! இந்த மைல்கல்லை எட்டியவர்கள் பட்டியல்!

சோதனையின் போது முதல்வர் பினராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்தனர் என்றார்.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களை குறிவைத்து சமீபத்தில் வந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல்களுடன் இந்த மிரட்டல் தொடர்புடையதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது.

Kerala Chief Minister Pinarayi Vijayan's official residence, Cliff House, received a bomb threat on Sunday, which turned out to be a hoax, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாயவிலைக் கடைகளில் இரும்புச் சத்து உப்பு விற்பனை

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மத்திய பட்ஜெட்டில் தமிழக நலன்கள் புறக்கணிப்பு - மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!

அடிப்படைக் கற்றல் ஆய்வு: மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT