FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது குறித்து...

Updated On : 17 ஜூலை 2025, 10:14 pm IST
அக்னி ஏவுகணை - ENS
பகிர்:

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 ஆகிய ஏவுகணைகளின் சோதனைகள் இன்று (ஜூலை 17) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சோதனைகளின் மூலம் ஏவுகணைகளின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகளைச் சரிபார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தச் சோதனைகளில், முதலில் அக்னி - 1 ஏவுகணை அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட சில மணி நேரம் கழித்து, பிருத்வி ஏவுகணை சந்திப்பூரிலுள்ள ஐடிஆரின் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

summary

India has reportedly successfully test-fired its Prithvi-2 and Agni-1 missiles in the Odisha coast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments