இந்தியா

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க தீா்மானம்: மாநிலங்களவையில் 2 மணி நேரம் விவாதம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்முறை காரணமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் பிப்.13-இல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்கும் தீா்மான நோட்டீஸை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அளித்ததாக மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து அந்தத் தீா்மானம் குறித்து விவாதிக்க 2 மணி நேரத்தை மாநிலங்களவை ஒதுக்கியுள்ளது. இந்த நேர ஒதுக்கீடு குறித்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவை, அந்த அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா். இந்த வாரம் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT