பாகிஸ்தான் ராணுவத்தை விஞ்சிய ராகுல்: பாஜக விமர்சனம்!
பாகிஸ்தான் ஆதரவாக ராகுலின் பேச்சு, மனநிலை குறித்து பாஜக விமர்சித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை ராகுல் காந்தி குறைத்து மதிப்பிட்டது ஆயுதப்படைகளை அவமதிப்பதாக உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது..
அண்டை நாட்டிற்கு ஆதரவாகப் பேசுவதில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர், பிரதமர், பயங்கரவாத மூளையாக இருந்தவர்களைக் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விஞ்சிவிட்டார். அவரது அவதூறு கருத்துகள் ராகுலின் ஆபத்தான மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.
Advertisement
Advertisement
காங்கிரஸின் வரலாற்று நிகழ்வுகளை மேற்கொள் காட்டி அவர், இந்தியப் பகுதியின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்தது முதல், மோடி அரசின் கீழ் இந்தியாவின் ஜனநாயக சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் மேற்கத்திய அலட்சியம் குறித்தும், நேரு-காந்தி சரணடைந்த கதைகளால் வரலாறு நிறைந்துள்ளது.
இந்தியாவின் சிங்கம் பிரதமர் மோடி, அவர் யாருக்கும் அடிபணிய மாட்டார் என்று பாராட்டினார்.
கடந்த செவ்வாயன்று மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திட்டதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது.
அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். வரலாறு இதற்குச் சாட்சி. இதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் குணம். மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள் என்று பேசினார். அவருடைய இந்த கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து, இந்தியா அவர்களின் பெயரில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அவர்களின் இதயத்தில் உள்ளது. ராகுலின் கருத்துக்கள் முதிர்ச்சி மற்றும் தீவிரத்தன்மை இல்லை என்பதைக் காட்டுகின்றது.
காங்கிரஸ் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தானே தெரிவித்திருந்தால், அது அவரது நம்பிக்கை மீது கடுமையான கேள்வியை எழுப்புகிறது, ஆலோசகர்கள் இதற்குப் பின்னால் இருந்தால் அவர்களை மாற்றுவது குறித்து ராகுல் தான் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் கௌரவத்தையும் அதன் ஆயுதப் படைகளின் வீரத்தையும் குறைத்து மதிப்பிட்ட காந்தியை, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மற்றும் பிரதமரின் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்தி, "ராகுல் முனீர்" மற்றும் "ராகுல் ஷெரீப்" என்று திரிவேதி அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.