புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை 
இந்தியா

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

ஒடிசாவில் கரோனா ரத யாத்திரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

DIN

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.

நாட்டை அச்சுறுத்திவந்த கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், கரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றது. நாட்டில் கரோனா பாதிப்பு இதுவரை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒடிசாவில் 15 பேர் தொற்றியிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் 34 பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

புரி ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை திருவிழா ஜூன் 27ஆம் தேதி முதல் நிகழவுள்ள நிலையில், ரத யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு வருவதாகவும் அதேசமயம் கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் ஜூன் 20 முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளதால் , கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க பள்ளிகள் செயல்படும் என்று கல்வி அமைச்சர் நித்யானந்தா கோண்ட் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

மனித மனங்களை எடை போடும் கதை!

பக்தா்களின் பங்களிப்புடன் பசுக்களைப் பாதுகாப்போம்: தேவஸ்தான செயல் அலுவலா்

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக காலை உணவு

SCROLL FOR NEXT