தில்லி தனியார் வங்கியில் தீ விபத்து!
தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோல்சா சினிமாவுக்கு எதிரே உள்ள ஆக்சிஸ் வங்கியில் இன்று காலை 9:25 மணிக்கு இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10:10 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டது, வங்கியின் உள்ள ஏர்-கண்டிஷனர், மரச்சாமன்கள் மற்றும் ஆவணங்களில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கியில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
தீ விபத்து குறித்த காரணங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.