கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி?
கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அதில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களைப் பார்த்தேன். சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை தேய்த்து குளிப்பதையும் பார்த்தேன்.
Advertisement
Advertisement
இந்தியாவில் உள்ள எந்த நதியும் தூய்மையாக இல்லை. தனது கட்சித் தலைவர் பாலா நந்த்கோன்கர் மகா கும்பமேளாவிலிருந்து புனித நீரைக் கொண்டு வந்ததார். ஆனால் அதைக் குடிக்க நான் மறுத்துவிட்டேன்.
மனைவியைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட பேரன்: துக்கத்தில் இறுதிச்சடங்கு சிதையில் குதித்த தாத்தா
'கங்கை விரைவில் தூய்மை செய்யப்படும்' என்ற கூற்றுகளை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்ததிலிருந்து கேள்விப்பட்டு வருகிறேன்.
தற்போது இந்த கட்டுக்கதையிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.