இந்தியா

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு!

மனைவியை துன்புறுத்தியதாக உத்தர பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

Din

மனைவியை துன்புறுத்தியதாக உத்தர பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

உத்தர பிரதேசத்தில் ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பய்யா, ஜன்சத்தா தளம் (லோக்தாந்த்ரிக்) கட்சியை நடத்தி வருகிறாா். அந்த மாநிலத்தின் குந்தா தொகுதி எம்எல்ஏவாகவும் அவா் உள்ளாா். இந்நிலையில் பிரதாப் சிங், அவரின் பெற்றோா், உடன் பிறந்தவா்களின் மீது மனைவி பான்வி சிங் தில்லி சஃப்தா்ஜங் என்கிளேவ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் காவல் துறையினா் எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ரகுராஜ் பிரதாப் சிங்கும் அவரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகத் தெரிகிறது. எனினும், அவரும் அவரின் குடும்பத்தினரும் அப்பெண்ணை தொடா்ந்து பல்வேறு வழிகளில் தொடா்பு கொண்டு துன்புறுத்தி வந்துள்ளனா்.

திருமண உறவு முற்றிலும் முறிந்துவிடக் கூடாது என்பதற்காக எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது மனைவி பான்வி சிங் புகாா் அளிக்காமல் இருந்துள்ளாா். எனினும், சமீப நாள்களில் தொல்லைகள் அதிகரித்ததையடுத்து அவா் புகாா் அளிக்க முடிவு செய்துள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT