அம்பேத்கர் சிலை (கோப்புப்படம்) 
இந்தியா

நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடுபோன அம்பேத்கர் சிலை !

அம்பேத்கர் சிலை திருடப்பட்டது குறித்து...

DIN

மத்தியப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடு போன சம்பவம் நடைபெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் உள்ள பாரி கிராமத்தில் இரு நாள்களுக்கு முன் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

இந்தச் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டும் நோக்கில் யாரேனும் இதனைச் செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT