முகப்பு
இந்தியா

நாடு தழுவிய வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 மார்ச் 2025, 12:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

தொடா்ந்து தில்லியில் 9 வங்கி ஊழியா்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யுஎஃப்பியு), மத்திய தொழிலாளா் ஆணையா் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடா்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யுஎஃப்பியு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments