மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம்! 5 நாள்கள் வங்கி சேவை முடங்கும்!
மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...
ஊழியர்கள் பற்றாக்குறைக்கு நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி வருகிற மே 25, 26 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அதற்கு முந்தைய மே 23 - 4ஆவது சனிக்கிழமை, மே 24 - ஞாயிறு விடுமுறை நாள்களாகும். அதேபோல மே 27 - பக்ரீத் பண்டிகை அன்று பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை நாளாகும்.
Advertisement
Advertisement
இதனால் எஸ்பிஐ வங்கி சேவைகள், தொடர்ந்து 5 நாள்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க முயற்சி செய்வதக்கவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த நாள்களில் ஏடிஎம், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
போராட்டம் ஏன்?
ஊழியர்களை தற்காலிகமாக அன்றி, நிரந்தரமாக பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதிய திட்ட(என்பிஎஸ்) பயனாளிகளுக்கான ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
ஏனெனில் தற்காலிக ஊழியர்கள் மூலமாக தரவுகள் கசிந்து முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டுகின்றனர்.