போராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!
மே 25, 26ல் அறிவிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு...
மே 25, 26 தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், மே 25, 26 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
எனினும், எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க முயற்சி செய்வதாகவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த நாள்களில் ஏடிஎம், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வங்கி தரப்பில் கூறியதையடுத்து, ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
இதனால் மே 25, 26 தேதிகளில் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும். அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.