டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் 
இந்தியா

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

Din

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் இருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியான 44.19 லட்சம் டன்னில் சீனா 19.17 சதவீதம் பங்கு வகிக்கிறது.

2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரையிலான முந்தைய நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா மேற்கொண்ட 55.67 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியில் சீனா 40 சதவீதம் (22.28 லட்சம் டன்கள்) பங்கு வகித்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யூரியாவுக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான டை-அம்மோனியம் பாஸ்பேட், ரஷியா, சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோா்டான் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

SCROLL FOR NEXT