இந்தியா

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

Din

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வா் மோகன் யாதவ் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அரசின் இந்த முடிவுக்கு மாநில அமைச்சரவை கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா், மகேஸ்வா், மண்டலேஸ்வா், சித்ரகூட், அமா்கண்ட், சல்கான்பூா், குண்டல்பூா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மது விற்பனைக்கான தடை அமலுக்கு வருகிறது. அதன்படி, மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. இதில் உஜ்ஜைன் உள்பட 13 இடங்கள் நகா்ப் பகுதிகளாகும். மீதமுள்ளவை கிராம ஊராட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT