ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்  
இந்தியா

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூக நீதி பயணத்தின் முதல் படி..

DIN

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில்,

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்தின் முதல் படியாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவு சமூகப் பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடுகளுக்கான தன்னிச்சையான வரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் எல்லை நிர்ணயப் பணி மக்கள்தொகை கணக்கெடுப்பால் கண்டறியப்பட்ட சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும். விளிம்புநிலை குழுக்களுக்கான விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். தொகுதிகளின் மறுவரையறை மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளுக்கு உணர்திறன் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவைகள், இந்திய நாடாளுமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையில் அவை விரிவுபடுத்தப்படுத்த வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான முடிவு நாட்டின் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகப் போராடிய லட்சக்கணக்கானவர்கள் தரவுகளை மட்டுமல்ல, கண்ணியத்தையும், அதிகாரமளிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

பொது வளங்களின் முக்கிய பயனாளியாக இருந்த தனியார்த் துறை, சமூக நீதி கட்டாயங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட முடியாது. ஏனெனில் நிறுவனங்கள் சலுகை விகிதங்களில் நிலம், மின்சார மானியங்கள், வரி விலக்குகள், உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் வரி செலுத்துவோர் பணத்தால் நிதியளிக்கப்பட்ட பல்வேறு நிதி சலுகைகள் உள்ளிட்ட கணிசமான நன்மைகளைப் பெற்றுள்ளன. அதற்கு ஈடாக, அவை நமது நாட்டின் சமூக அமைப்பைப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமானது.

பிகாரின் ஒத்துழைப்பைப் பிரதமருக்கு உறுதியளிக்கும் வகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு அடிப்படை யதார்த்தங்களுக்குப் பலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளை உண்மையான சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் பறிமுதல்

கல் குவாரிக்கு தடை கோரி வழக்கு கரூா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

சிறுமிக்கு திருமணம்: இளைஞா் உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

பெருந்துறையில் விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT