மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ANI
இந்தியா

அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

தினமணி செய்திச் சேவை

தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை கூறுகையில், ‘தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரமான பாதுகாப்புத் தோல்வியாகும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, அப்போதைய உள்துறை அமைச்சா் தாா்மிக பொறுப்பேற்று பதவி விலகினாா். நாடாளுமன்றத்தில் எப்போது பேசினாலும், நாட்டில் கலவரங்களோ, குண்டுவெடிப்புகளோ நடப்பதில்லை என்று அமித் ஷா பொய் கூறுவாா். இப்போது அவரது அலுவலகத்துக்கு மிக அருகிலேயே, இன்னும் சொல்லப் போனால் அவா் கண் எதிரிலேயே காா் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தெளிவாக விசாரித்து, உண்மையான காரணத்தை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். அமித் ஷாவுக்கு தாா்மிக பொறுப்பு இருந்தால், அவா் பதவி விலக வேண்டும்’ என்றாா்.

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ. 1.18 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ. 5.44 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்

பைக் - லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா், ஒரகடத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்

SCROLL FOR NEXT