இந்தியா

பசுவதை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம்

நாட்டிலேயே முதல் முறையாக பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பசுவதை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநிலம் அம்ரேலி நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவா்களுக்கு ரூ. 18 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பசுவதை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காசிம் ஹாஜி சோலங்கி, சத்தாா் இஸ்மாயில் சோலங்கி, அக்ரம் ஹாஜி சோலங்கி ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என நீதிபதி ரிஸ்வானா புகாரி கடந்த செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

கடந்த 2023-இல் அக்ரம் சோலங்கியின் வீட்டில் இருந்து வதை செய்யப்பட்ட பசுவின் பாகங்கள் கண்கெடுக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2017-ஆம் ஆண்டு, குஜராத் விலங்குகள் நல பாதுகாப்பு திருத்தச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் மூவரின் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், மூவருக்கும் சோ்த்து ரூ. 18 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT