பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் Photo: X / ANI
இந்தியா

ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை!

முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பான எண்ணப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேவேளையில் மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ரகோபூர் தொகுதியில போட்டியிட்ட மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் 5.30 மணி நிலவரப்படி 1,16,467 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 1,02,587 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம், தேஜஸ்வி யாதவ் 13,880 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Tejashwi Yadav, the chief ministerial candidate of the Mahagathbandhan alliance, is leading by a margin of 13,000 votes in the Raghopur constituency in the Bihar Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிர்பயா போல் இறந்திருக்க வேண்டும் : உன்னாவ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!

நாடாளுமன்றத்தில் இன்று..!

பிரதமரைத் தாக்க முயற்சியா? அமைச்சர் வெளியிட்ட விடியோ!

இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை!

மணாலி - மண்டி இடையே போலி சுங்கச்சாவடி! இணையத்தில் வைரல்

SCROLL FOR NEXT