இந்தியா

வா்த்தகம், முதலீடுகள் ஊக்குவிப்பு: ஸ்லோவேனியாவுடன் இந்தியா ஆலோசனை

இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

Chennai

புது தில்லி: இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின் 10-ஆவது அமா்வு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில், வேளாண், ரசாயனம், மருந்து உற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உற்பத்தி, சுற்றுலா, குறு-சிறு-நடத்தர நிறுவனங்கல், ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்திய - ஐரோப்பிய யூனியன் இடையேயான சமமான, பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ. 1.18 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ. 5.44 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்

பைக் - லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT