தெலங்கானா அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்!
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் பதவியேற்பதாகத் தகவல்...
தெலங்கானா அரசின் அமைச்சரவையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் சேர்க்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆனால், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வெற்றி பெற்ற பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் மகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் அசாருதீனை சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்போவதாக தெலங்கானா அமைச்சரவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நாளை மறுநாள் (அக்டோபர் 31) தெலங்கானா காங்கிரஸ் அரசின் அமைச்சராகப் பதவியேற்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தெலங்கானா அமைச்சரவையில் ஒரு இஸ்லாமிய உறுப்பினர் கூட இடம்பெறவில்லை என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
former Indian cricket team captain Muhammad Azharuddin will be inducted into the Telangana government's cabinet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.