முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் 
இந்தியா

தெலங்கானா அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்!

தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் பதவியேற்பதாகத் தகவல்...

இணையதளச் செய்திப் பிரிவு

தெலங்கானா அரசின் அமைச்சரவையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் சேர்க்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆனால், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வெற்றி பெற்ற பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் மகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானார்.

இதையடுத்து, அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் அசாருதீனை சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்போவதாக தெலங்கானா அமைச்சரவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நாளை மறுநாள் (அக்டோபர் 31) தெலங்கானா காங்கிரஸ் அரசின் அமைச்சராகப் பதவியேற்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தெலங்கானா அமைச்சரவையில் ஒரு இஸ்லாமிய உறுப்பினர் கூட இடம்பெறவில்லை என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்

former Indian cricket team captain Muhammad Azharuddin will be inducted into the Telangana government's cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தீா்த்தக்குட ஊா்வலம்

மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணிகள்: எம்எல்ஏ சுந்தா் ஆய்வு

சின்ன வெங்காயம், மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆலோசனை

ஊத்தங்கரை பெண் தலைமைக் காவலா் கமுதியில் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

ஒசூா்-பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. நரசிம்மன்

SCROLL FOR NEXT