புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 22) விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாகச் செயல்படும் செயலி ஒன்றின் மீதான புகாரில் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 22) விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில், ராபின் உத்தப்பா தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.