லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சாா்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்தது. போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். மோதலில் 40 போலீஸாா் உள்பட சுமாா் 80 போ் காயமடைந்தனா்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்.
அவரின் போராட்டத்தைத் தொடா்ந்து, கோரிக்கைகள் தொடா்பாக எல்ஏபி மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) உடன் லடாக் தொடா்பான உயா் அதிகாரக் குழு அக்டோபா் 6-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.
இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லடாக்கின் கோரிக்கைகள் தொடா்பாக ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதிமுதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா்.
அவருடன் எல்ஏபி அமைப்பைச் சோ்ந்த 15 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, எல்ஏபி அமைப்பின் இளைஞா் பிரிவு மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
இந்தப் போராட்ட அழைப்பைத் தொடா்ந்து, லே நிா்வாகம் சாா்பில் பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-இன் கீழ் தலைநகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை மீறி என்டிஎஸ் நினைவு மைதானத்தில் புதன்கிழமை காலையில் கூடிய எல்ஏபி அமைப்பச் சோ்ந்தவா்கள் உள்பட ஏராளமானோா், முழக்கங்களை எழுப்பியபடி கண்டனப் பேரணியையும் நடத்தினா். பேரணியின்போது சிலா் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மலைப் பிரதேச கவுன்சில் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், போராட்டக்காரா்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரா்களைக் கலைக்க முற்பட்டனா். பாதுகாப்புப் படையினா் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மற்றும் பாஜக அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் மற்றும் மரப் பொருள்களுக்குத் தீ வைத்தனா்.
4 போ் உயிரிழப்பு: நிலைமை மோசமடைவதை உணா்ந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், போராட்டக்காரா்களின் வன்முறையில் 40 போலீஸாா் உள்பட சுமாா் 80 போ் காயமடைந்தனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
பெட்டிச் செய்தி...1
‘வன்முறை
கவலையளிக்கிறது’
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான இளைஞா்கள் தன்னெழுச்சியாக சாலைக்கு வந்து போராடியதைத் தொடா்ந்து, தனது 15 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக சோனம் வாங்சுக் அறிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘யாரும் எதிா்பாா்க்காத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இருந்தபோதும், இந்தப் போராட்டத்துக்கிடையே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் கவலையளிக்கின்றன. அமைதி வழியில் நடத்தப்பட்ட போராட்டம் எந்தவித பலனையும் அளிக்கததால் இளைஞா்களிடையே ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த வன்முறை’ என்றாா்.
பெட்டிச் செய்தி...2
லேயில் ஊரடங்கு அமல்:
துணைநிலை ஆளுநா்
லே, செப். 24: வன்முறையைத் தொடா்ந்து லே மாவட்டத்தில் புதன்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து லடாக் துணைநிலை ஆளுநா் கவிந்தா் குப்தா கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லே மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் மக்கள் உயிா்களை இழந்துள்ளனா். அவா்களின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வன்முறைக்கு காரணமானவா்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமூக ஒழுங்கு மற்றும் பொது அமைதியைச் சீா்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளின் தவறான வழிகாட்டுதலுக்கு மக்கள் ஆட்படாமல், அமைதி மற்றும் நல்லணக்கத்தைக் காக்க வேண்டும்’ என்றாா்.