பிரியங்கா காந்தி ANI
இந்தியா

மகளிர் மாநாட்டில் பங்கேற்க பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிகார் செல்லும் பிரியங்கா காந்தி..

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக செப். 26 (நாளை) ஒருநாள் பயணமாக பிகார் செல்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

பிகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஏஐசிசி பொதுச் செயலாளர் சையத் நசீர் உசேன், பிபிசிசி தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரியங்கா காந்தி நாளை நண்பகல் பாட்னாவில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பிறகு 3 மணியளவில் மோதிஹரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் பிரியங்காவின் இரண்டாவது மாநில வருகை இதுவாகும்.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் வாக்காளர் அதிகார யாத்திரையில் கலந்துகொண்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல் காந்தி பதினைந்து நாள்களில் 25 மாவட்டங்களில் 1,300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Congress general secretary Priyanka Vadra will be in Bihar on Friday for a day-long tour during which she is scheduled to interact with women self-help groups and address a rally, a senior party leader said here on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT