மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிப்பு?
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தொகுதிகளை 816-ஆக அதிகரிப்பதன் மூலம், அதில் 33 சதவீதத்தை அதாவது 273 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நோக்கில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை (ஏப்.2) நிறைவடைய இருந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் 2 அல்லது 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்த மாதத்தில் மீண்டும் எப்போது கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்திவைக்கப்படும். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு கூட்டம் நடைபெறக் கூடும்’ என்று தெரிவித்தது. எனினும் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.