FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து!

சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து தெரிவித்தது பற்றி...

சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து - X
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டின் பூஜை அறைக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள மோடி தெரிவித்திருப்பதாவது:

”குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, சிறப்புமிக்க புத்தாண்டு நன்னாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் நிறைந்ததொரு சிறப்பான ஆண்டு அமையப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்திருந்தார்.

summary

Tamil New Year! Modi visits C.P. Radhakrishnan's home to extend greetings!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments