முகப்பு
இந்தியா

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Updated On : 14 ஏப்ரல் 2026, 8:51 am IST
மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநராக 2021 செப்டம்பர் 18 முதல் கடந்த மார்ச் மாதம் வரை பதவி வகித்தவர் ஆர்.என். ரவி (73).

மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்த நிலையில் மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழக ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து மேற்கு வங்க ஆளுநராக மார்ச் 12 பதவியேற்றார்.

தமிழகத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும்போது தமிழக மக்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் ஆர்.என்.ரவி.

சித்திரை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு நாள் கொண்டாடப்படும் நிலையில் மேற்கு வங்க ஆளுநரான ஆர்.என்.ரவி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “விசேஷமிக்க தமிழ்ப் புத்தாண்டு திருநாளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

West Bengal Governor Extends Tamil New Year Wishes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.