முகப்பு
இந்தியா

மே.வங்கத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் 87 ஆகக் குறைப்பு!

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் 87 ஆகக் குறைக்கப்பட்டது குறித்து...

Updated On : 17 ஏப்ரல் 2026, 6:49 pm IST
மேற்கு வங்க தேர்தல்... - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 87 ஆகக் குறைக்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து, அங்கு தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 87 ஆகக் குறைக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரேசத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் அதிகப்படியாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களும், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் 8 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் 90 வாக்கு எண்ணும் மையங்களும், 2021 தேர்தலில் 108 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Election Commission has announced that the number of vote-counting centers for West Bengal is being reduced to 87.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.