மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு
மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையில் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ளும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.17,744 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு
மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையில் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ளும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.17,744 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஊரக நலன் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுஆய்வு செய்தபோது 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
இதுதொடா்பாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்காசிய போா்ப் பதற்றத்தால் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதாரம், குடியிருப்புகள் கட்டமைப்பு, சாலை மேம்பாடு மற்றும் நீா்நிலை செயல்பாடுகளில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இத்துறைகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Advertisement
எனவே, மேற்கூறிய துறைகள் சாா்ந்த திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. விபி-ஜி ராம் ஜி திட்டம், 2025 அமலுக்கு வரும் வரை 100 நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். ஊதியங்கள் முறையாக வழங்கப்படும். இதற்காக ரூ.17,744 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஊரகப் பகுதிகளில் 2029, மாா்ச் மாதத்துக்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டும் நோக்கில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் நான்காவது கட்டத்தின்கீழ் 12,100 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வித தொய்வுமின்றி தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.