முகப்பு
இந்தியா

உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள்: தமிழக மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்!

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள் என தமிழக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

Updated On : 22 ஏப்ரல் 2026, 11:03 pm IST
ராகுல் காந்தி - PTI
பகிர்:

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள் என தமிழக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில், ”தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டது காங்கிரஸ்-திமுக கூட்டணி. தொடர்ந்து அதனை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கான எனது செய்தி, உங்கள் அடையாளம், உங்கள் மொழி மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாத்திடுங்கள்.

Advertisement

Advertisement

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை (ஏப். 23) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான பணிகள் தேர்தல் ஆணையம் சார்பில் முழு வீச்சில் நடைபெற்றுள்ளன.

summary

Congress leader Rahul Gandhi urged Tamil Nadu voters on April 22 to “protect your identity” in a message issued ahead of voting in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments