உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள்: தமிழக மக்களுக்கு ராகுல் காந்தியின் செய்தி
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள் என தமிழக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள் என தமிழக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில், தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டது காங்கிரஸ்-திமுக கூட்டணி. தொடர்ந்து அதனை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கான எனது செய்தி, உங்கள் அடையாளம், உங்கள் மொழி மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாத்திடுங்கள்.
Advertisement
இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு நாளை (ஏப். 23) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான பணிகள் தேர்தல் ஆணையம் சார்பில் முழு வீச்சில் நடைபெற்றுள்ளன.
Congress leader Rahul Gandhi urged Tamil Nadu voters on April 22 to “protect your identity” in a message issued ahead of voting in the state.