முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்! வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி...

Updated On : 22 ஏப்ரல் 2026, 2:03 pm IST
கொல்கத்தாவில்... - IANS
பகிர்:

மேற்குவங்கத்தில் நாளை(ஏப். 23) 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1,478 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா தலைமையிலான என்டிஏ கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

முதல்கட்ட தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

summary

West Bengal Phase 1 Elections: Preparations Intensify by election commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments