முகப்பு
இந்தியா

காஜிப்பூர் பாலியல் வன்கொடுமை: விசாரணை கோரி ராகுல் வலியுறுத்தல்!

வன்கொடுமை பற்றி உயர்நிலை விசாரணை நடத்த ராகுல் வலியுறுத்தல்...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:07 PM
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரசேத மாநிலம் காஜிப்பூரில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில்,

மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யக்கூடப் பெற்றோர்கள் கெஞ்ச வேண்டிய அவலநிலை நிலவுகிறது. ஆட்சியில் உள்ள அரசு தொடர்ந்து நீடித்திருக்க எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

Advertisement

குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.