வங்கதேசத்துக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையர் யார்?
வங்கதேசத்துக்கான அடுத்த இந்தியாவின் உயர் ஆணையர் யார்? என்பது தொடர்பாக...
வங்கதேசத்துக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை (ஏப்.27) தெரிவித்துள்ளது.
இந்தியாவும் வங்கதேசமும் பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்தி வரும் சூழலில், தற்போது, இந்தப் பொறுப்பில் உள்ள பிரணய் வர்மா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினேஷ் திரிவேதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராகவும் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
Advertisement
2009 முதல் 2019 வரை திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பராக்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர், 2021 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அமைச்சகத்தின் தகவலின்படி, தினேஷ் திரிவேதி விரைவில் இந்தப் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.