பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2026 - 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் பயணிக்கிறது.
சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது.
தன்னிறைவு பெற்ற இந்தியா என் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். இந்திய பொருளாதார வளர்ச்சி 7% அதிகரித்துள்ளது.
எளிய முறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.