FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்தது குறித்து...

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஜோசப் விஜய் - எக்ஸ்
பகிர்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) சந்தித்துப் பேசினார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கவுள்ளார்.

மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மாநில நிதிப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை தில்லி புறப்பட்ட விஜய், தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர், பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

மேலும், அரசு நிகழ்ச்சிகளில் மாநில வாழ்த்துப் பாடலை முதன்மையாகப் பாட வேண்டும், மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முதல்வர் விஜய் முன்வைத்தார்.

summary

Chief Minister C joseph Vijay Meets Nirmala Sitharaman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments