எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு!
சமூக வலைதளத்தில் ஒருவர் குறைகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டது குறித்து...
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 8) ஆய்வு மேற்கொண்டார்.
மகப்பேறு முடிந்த தாய்மார்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மகப்பேறு மருத்துவர்களிடமும் உரையாடினார்.
முதல்வர் விஜய்யின் இந்த வருகையின்போது, மருத்துவமனையில் கூடுதல் கழிப்பறைகள் வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக முதல்வர் நம்பிக்கை அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மகப்பேறு மருத்துவமனை குறித்து சமூக வலைதளத்தில் வந்த புகாரைத் தொடர்ந்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இந்த ஆய்வின் போது மருத்துவப் பயனாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவர்களிடம் உரையாடிய முதல்வர், சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Tn CM Joseph vijay inspects Egmore Children's Hospital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.