முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் - அருணாசல பிரதேசம் இடையே முதலாவது எல்லைத் தூண் நிறுவப்பட்டது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:28 AM
- X | Pema Khandu
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:25 PM

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையே முதலாவது எல்லைத் தூண் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இது, இரு மாநில எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் நம்சாய் பிரகடன அமலாக்கத்தின் குறிப்பிடத்தக்க படிக்கல்லாகும்.

அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையே பல்லாண்டுகளாக நிலவும் எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் கடந்த 2022-இல் நம்சாய் பிரகடனம் கையொப்பமிடப்பட்டது.

அதன்படி, இரு மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கள ஆய்வு, வரலாற்றுரீதியான ஆவணங்கள் ஆய்வு, உள்ளூா் மக்களுடன் கலந்துரையாடல்களின் மூலம் சுமுக முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:26 AM

அதன் பலனாக, செய்ஜோசா எல்லைப் பகுதியில் இரு மாநிலங்களுக்கும் இடையிலான முதல் எல்லைத் தூண் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இரு மாநில அரசு அதிகாரிகள், காவல் துறையினா், சமூகத் தலைவா்கள், கிராமத் தலைவா்கள் முன்னிலையில் இந்தத் தூண் நிறுவப்பட்டது.

இது, எல்லைப் பிரச்னை தீா்வு நடைமுறையில் வரலாற்று மைல்கல் என்று அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு தெரிவித்தாா்.