முகப்பு
இந்தியா

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

அஜ்மீரில் ரூ.16,686 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்படுவது குறித்து...

Updated On : 26 பிப்ரவரி 2026, 9:39 pm IST
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப். 28 அன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், ரூ. 16,686 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

அஜ்மீரில், ரூ.16,686 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலைகள், ரயில்வே, நீர்பாசனம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 43 முக்கிய மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் சனிக்கிழமை (பிப். 28) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதில், சுமார் ரூ.8,554 கோடி மதிப்பிலான மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ரூ.8,132 கோடி மதிப்பிலான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களும் தொடங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

மேலும், ரூ.1,207 கோடி செலவில் அமைக்கப்படும் பண்டிகுய் முதல் ஜெய்ப்பூர் வரையிலான 4 வழி பசுமைவழி விரைவுச்சாலை உள்ளிட்ட ரூ. 4,516 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகள் திட்டங்களையும் அவர் துவங்கி வைக்கின்றார். மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் தேர்வாகியுள்ள 21,863 இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணிஆணை வழங்கவுள்ளார்.

இத்துடன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்யைத் தடுக்க ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாமையும் அவர் தொடங்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Prime Minister Narendra Modi will inaugurate development projects worth Rs 16,686 crore in Ajmer, Rajasthan, on Feb. 28.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments