கொல்கத்தாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மமதா புதிய அறிவிப்பு!
கொல்கத்தா காவல்துறையில் இரண்டு புதிய அறிவிப்புகள் பற்றி..
மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில் கொல்கத்தா காவல்துறையில் இரண்டு புதிய அறிவிப்புகளை அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மகளிர் "பிங்க் பூத்கள்" முக்கிய நகரச் சந்திப்புகளில் அமைக்கப்படும் என்றும், அதன் நிலையங்கள் மாலை முதல் நள்ளிரவு வரை செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.